தடாவைவிடக் கடுமையானது: கொளத்தூர் மணி
பெங்களூர்:
மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள பொடோ சட்டம் தடா சட்டத்தைவிடகடுமையானது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணிகூறியுள்ளார்.
கடத்தல் மன்னன் வீரப்பனிடமிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதில் முக்கியப்பங்கு வகித்தவர் கொளத்தூர் மணி. நெடுமாறனுடன் சேர்ந்து வீரப்பனிடம் பேசிராஜ்குமாரை மீட்டவர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் 123வது பிறந்தநாள் விழாபெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.
நிகழ்ச்சி முடிந்த பின் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தடாவையே புதிதாக பொடோ என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இது தடாவை விட கடுமையானது. அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காக இந்த சட்டம்கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனென்றால் தீவிரவாதிகளை ஓடுக்க ஏற்கனவே பலசட்டங்கள் உள்ளன.
மனித உரிமைகளை மீறி பொடோ சட்டத்தை கொண்டுவந்துள்ளது ஜனநாயகத்திற்குஎதிரானது.
இந்தச் சட்டத்தின்படி வீரப்பனை தெரியும் என்றாலும் ஏன் சொல்லவில்லை என்றுகைது செய்வார்கள்.
இந்த சட்டதின்படி போலீசார் அறிக்கை கொடுத்தாலே போதும்.
மேலும் வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தாலும் அதுவும் பயங்கரவாதமாககருத்தப்படும்.
இந்த பொடோ சட்டத்தை எதிர்த்து விரைவில் நாடு முழுவதும் பிரச்சாரம்செய்யவுள்ளோம்.
ராஜ்குமார் மீட்டு வரப்பட்ட பின் நான் வீரப்பனை சந்திக்கவில்லை. வீரப்பன்சரணடைய தயாராக இருக்கிறாரா என்பதும் எனக்கு தெரியாது. அரசு விரும்பி, அரசுதூதராக சென்று பேசவேண்டும் என்று கூறினால் காட்டுக்கு செல்ல நான் தயாராகஇருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications