சினிமாவிற்கு அழைத்துப் போய் காதலியைக் "கை கழுவிய" காதலன்
சென்னை:
சேலத்தில் காதலியைப் பிடிக்காத காதலன், அவரை வேறொரு ஊர் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அங்குவிட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார்.
சேலம் மாவட்டம் மின்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் உமா என்ற பெண்ணைக் காதலித்துவந்தார். இந்த நிலையில் உமாவை திடீரென ராமச்சந்திரனுக்குப் பிடிக்கவில்லை.
ஆனால் அவரை எப்படி தவிர்ப்பது என்று தெரியாமல் முழித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு வித்தியாசமானஒரு யோசனை வந்துள்ளது.
வந்தவாசிக்கு உமாவை அழைத்துக் கொண்டு வந்தார் ராமச்சந்திரன். அங்குள்ள ஒரு தியேட்டருக்குப் படம்பார்க்கப் போனார்கள். படத்தின் பாதியிலேயே, இதோ வருகிறேன் என்று கூறி விட்டு ராமச்சந்திரன் வெளியேபோயுள்ளார். போனவர் போனவர்தான். படம் முடிந்த பிறகும் கூட வரவில்லை.
என்ன செய்து என்று தெரியாமல் விழித்த உமா, தியேட்டருக்கு வெளியே இருந்த கடைகளில் சென்று தனதுநிலையைக் கூறி ஊருக்குப் போக பணம் கேட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த சிலர் உமாவை அருகிலிருந்த போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீஸார்பரிதாபப்பட்டு பணம் கொடுத்து ஒரு காவலரையும் உடன் அனுப்பி உமாவை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications