மதானி ஆதரவாளர்கள் சாலை மறியல்... தமிழக-கேரள எல்லையில் போலீஸ் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோவை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்பாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்துல் நாசர்மதானியை விடுதலை செய்யக் கோரி அவரது ஆதரவாளர்கள் கேரள-தமிழக எல்லையில் சாலை மறியிலில் இன்று(திங்கள்கிழமை) ஈடுபடுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான கேரளா மக்கள்ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில்மதானியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி மதானியின் ஆதரவாளர்கள் கோவை அருகே.கேரள-தமிழக எல்லையில் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து தமிழக-கேரள எல்லையில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை)கேரளா செல்லும் பேருந்துகள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

கேரளா செல்லும் வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டதால் அவர்கள் தமிழக-கேரள எல்லை நகரானபாலக்காட்டில் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக கூறினர்.

எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளர். தண்ணீர் பீய்ச்சிஅடிக்கும் வாகனங்களுடனும், நவீன ஆயுதங்களுடனும் போலீசார் தயாராக உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+