திமுக-பாஜக உறவில் விரிசல் இல்லை: கருணாநிதி
சென்னை:
திமுக-பாஜக உறவில் எந்த விதமான விரிசலும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (திங்கள்கிழமை) அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திமுக-பா.ஜ.க. உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகவும் வரும் செய்திகள் உள்நோக்கம் கொண்டவை. அந்த செய்திகள் தவறானவை.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாமக போட்டியிட்ட தொகுதிகளில் திமுக தொண்டர்கள் தேர்தல் பணியைசிறப்பாக செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மிக தாமதாமாக சேர்ந்தது. தேர்தலுக்கு சில தினங்கள்இருக்கும்போதுதான் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது.
பாமகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிக்கு தங்களை தயார் செய்துகொள்ள திமுக தொண்டர்களுக்கு போதிய காலஅவகாசம் இல்லை. இது தான் தேர்தல் பணியில் திமுக தொண்டர்களை சிறப்பாக செயல்பட முடியாததற்கானகாரணமாக இருக்கும்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தவுடனேயே, தமிழகத்தில் திமுகதலைமையிலான கூட்டணியில் ராமதாஸ் இணைந்திருந்தால் பாமகவுக்கு ஆதரவாக தேர்தல் பணயில் ஈடுபடதொண்டர்களுக்கு தேவையான கால அவகாசம் கிடைத்திருந்திருக்கும்.
தீவிரவாத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டம் இன்னமும் முழு வடிவம் பெறவில்லை. இந்த சட்டம்நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டியது மிகமுக்கியம் என்று கூறினார் கருணாநிதி.