இந்தியப் பெருங்கடலில் நில அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே இந்தியப் பெருங்கடலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நில அதிர்ச்சிஏற்பட்டது.
திருவனந்தபுரத்திற்கே தென் மேற்குத் திசையில் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடல் பகுதிகளில் இந்த நிலஅதிர்ச்சி மையம் கொண்டிருந்தது என்று வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது ரிக்டர் அளவு கோலில் 4.5 என்று பதிவாகியிருந்தது.
இடாபழஞ்சி. நெடுமாங்காடு, அட்டிங்கல், கிள்ளிமனூர் மற்றும் வெள்ளியம்பலம் பகுதிகளில் வசிக்கும் மக்களும்இந்த நில அதிர்ச்சியை உணர்ந்ததாகக் கூறினர்.












Click it and Unblock the Notifications