"ஏர்-இந்தியா"வில் லண்டன் சென்ற 2 ஆப்கானியர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

போதிய டிக்கெட் மற்றும் பயண ஆவணங்கள் ஏதுமின்றி ஏர் இந்தியா விமானம் மூலம் லண்டன் சென்ற 2ஆப்கானியப் பயணிகள் குறித்து டெல்லியில் உள்ள இங்கிலாந்து இம்மிகிரேசன் அதிகாரிகள் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.

மும்பையிலிருந்து டெல்லி வழியாக லண்டனுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற ஏர்-இந்தியா 111 விமானத்தில்மும்பை-டெல்லிக்கு மட்டும்தான் அவர்கள் டிக்கெட் வாங்கியுள்ளனர். ஆனால் லண்டன் வரை அவர்கள்பயணித்துள்ளனர்.

லண்டனில் இறங்கியதுமே அவர்கள் அங்குள்ள இம்மிக்கிரேசன் அலுவலகத்திற்குச் சென்று தங்களுக்கு அரசியல்அடைக்கலம் வேண்டும் என்று கோரியுள்ளனர்.

டெல்லியிலேயே ஏர்-இந்தியா விமான ஊழியர்கள் எப்படி இவர்கள் இரண்டு பேரையும் ஏற்றினர் அல்லதுகூடுதலாக இருக்கும் இந்த இரண்டு பேரையும் எப்படி எண்ணாமல் விட்டுவிட்டனர் என்று இங்கிலாந்துஅதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடைக்கலம் தேடி வந்துள்ள இரண்டு ஆப்கானியர்களையும் என்ன செய்வது என்ற பிரச்சனை ஒருபுறம் இருக்க,விசாரணையின் முடிவில் ஏர்-இந்தியா செய்தது தவறு என்று நிரூபணமானால் கடுமையான அபராதம் விதிக்கஇங்கிலாந்து இம்மிகிரேசன் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+