ஈரோட்டில் ஆந்த்ராக்ஸ் பீதி
ஈரோடு:
ஈரோட்டில் வெள்ளை பவுடருடன் உருது மொழியில் சில வரிகளும் எழுதப்பட்டு ஒருவருக்கு வந்த தபாலைப்பார்த்து பொதுமக்கள் பீதியடைந்தனர்.
ஈரோடு எல்.ஐ.சி. காலனியில் வசிக்கும் ஒருவருக்கு மர்ம தபால் ஒன்று நேற்று (திங்கள்கிழமை) வந்தது.
அவர் அதைப் பிரித்துப் பார்த்த போது, அதற்குள் வெள்ளைப் பவுடரும், உருது தொழியில் சில வரிகளும்எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து ஆந்த்ராக்ஸாக இருக்குமேதா என்று அதிர்ந்து விட்டார்.
பிறகு அந்தப் பவுடரை ஈரோடு மாவட்டப் போலீஸ் அலுவலகத்தில் ஒப்படைத்தார். அந்தப் பவுடரில் ஆந்த்ராக்ஸ்கிருமி இருக்கிறதா என்று பரிசேதாதனை செய்ய போலீசார் அதை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்துள்ளனர்.
பரிசோதனைக்குப் பிறகுதான் அந்தத் தபாலில் வந்தது ஆந்த்ராக்ஸா என்பது தெரியவரும்.
இந்தத் தபால் குறித்துத் தகவல் அறிந்ததும் ஈரோடு மக்கள் ஆந்த்ராக்ஸ் பரவிவிடுமோ என்ற பீதியில் உள்ளனர்.