மீண்டும் காங்கிரசுக்கு வந்த பாண்டிச்சேரி ராமதாஸ்
சென்னை:
தமிழகத்தில் ராமதாஸ் மாதிரி பாண்டிச்சேரியில் ப.கண்ணன்.
காங்கிரசிலிருந்து விலகி த.மா.காவுக்குப் போய், பின்னர் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்துமீண்டும் காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த கண்ணன் இப்போது ஒரேயடியாய் மீண்டும் காங்கிரஸ் கட்சிலேயேஇணைந்துவிட்டார்.
பாண்டிச்சேரி அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உள்ள ப.கண்ணன்.
கடந்த1996ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸில் சேர்ந்தார். பின்னர் மூப்பனாருடன் ஏற்பட்டகருத்து வேறுபாடு காரணமாக கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தமாகாவிலிருந்து விலகினார். பாண்டிச்சேரி மக்கள்காங்கிரஸ் என்ற கட்சியைத் துவக்கினார்.
சட்டசபைத் தேர்தலை திமுகவுடன் சேர்ந்து சந்தித்தார் கண்ணன். சமீபத்தில் திமுக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸுக்குஆதரவு அளித்தார். அவரது ஆதரவு பெற்ற ரங்கசாமி முதல்வர் பதவிக்கு வந்துள்ளார்.
இந் நிலையில் தனது கட்சியை கலைத்து விடப் போவதாகவும், தாய்க் கட்சியான காங்கிரஸில் இணையப் போவதாகவும் அவர்அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த வாரம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்தைச் சந்தித்துப் பேசினோம். உடனடியாககாங்கிரஸ் கட்சியுடன், பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் இணைகிறது.
தேச நலன் மற்றும் பாண்டிச்சேரி மக்கள் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.
இதையடுத்து பாண்டிச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இரண்டுசுயேச்சைகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதால் 17 ஆக அதன் பலம் தற்போது உள்ளது. இதையடுத்து காங்கிரஸ்கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைத்துள்ளது.
தற்போது திமுக கூட்டணியின் பலம் 8 ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications