பாகிஸ்தான் அமைச்சருடன் தொலைபேசியில் பேசினார் சு. சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அப்துல் சத்தாரிடம் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமிதொலைபேசியில் பேசினார்.

இதுகுறித்து ஜனதாக்கட்சி இன்று சென்னையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அப்துல் சத்தார் எங்கள் கட்சித் தலைவரிடம் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது 2 தலைவர்களும் பல உலகப் பிரச்சனைகள் குறித்துப் பேசினார்கள். ஆப்கானிஸ்தான் போரில்தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் எடுத்த தைரியமான முடிவை உலகமேபாராட்டுவதாக சுவாமி கூறினார்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான்களை ஆதரித்துவந்த பாகிஸ்தான் தற்போது அவர்களைமுழுமையாக எதிர்க்க ஆரம்பித்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது என்றார் சுவாமி.

இந்த உரையாடல் சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னையில் இன்று (புதன்கிழமை) நிருபர்களுக்குப் பேட்டியளித்த சுவாமி கூறியதாவது,

மத்திய அரசு தற்போது இயற்றியுள்ள தீவிரவாதத் தடுப்புச்சட்டம் மிக அவசியமான ஒன்றாகும். இந்திரா காந்திஆட்சிக் காலத்தில், எமர்ஜென்சியின் போது மிசா சட்டம் பயன்படுத்தப்பட்டது. அதை நான் கடுமையாகஎதிர்த்தேன். அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதால் அதை நான் எதிர்த்தேன்.

தற்போது இயற்றப்பட்டுள்ள "போடோ" சட்டம் மிகச் சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச்சட்டத்தினால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.

நோயைக் குணமாக்க அறுவைச் சிகிச்சை செய்தால், உடம்பிலிருந்து சிறிது ரத்தம் சிந்துவதைத் தவிர்க்க முடியாது.அதுபோல தீவிரவாதிகளை அழிக்கும் பணியின் போது பொதுமக்களுக்கும் சிறிது பாதிப்பு இருக்கும் என்றார்சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+