உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரூச்சா பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.பி. பரூச்சா இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.
வியாழக்கிழமை காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் பரூச்சாவுக்கு ஜனாதிபதிகே.ஆர். நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் வாஜ்பாய், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வராக ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என்ற தீர்ப்பை கூறி, தமிழகஅரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பரூச்சா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications