2வது நாளாக பி-52 விமானங்கள் தாக்குதல்
வாஷிங்டன்:
தலிபான்கள் மீது அமெரிக்காவின் பி-52 ரக போர் விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (வியாழக்கிழமை)கடும் தாக்குதல் நடத்தியுள்ளன.
தலிபான்கள் இருக்கும் பகுதிகளில் மட்டுமே இந்த வகையான கார்ப்பெட் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அங்குநிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தலிபான்கள் இந்தக் குண்டு வீச்சுக்குப் பயந்து சிதறி ஓடினர்.
தஜிகிஸ்தான் எல்லையிலும் தாக்குதல்
தஜிகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த தலிபான் படையினர் மீதும் இன்று அதிகாலை 4.00 மணிக்குபி-52 விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தின.
இதே பகுதியில்தான் கடந்த வாரத்தில் அமெரிக்க விமானங்கள் 15 குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்தியுள்ளன.
குளிர்காலத்திலும் தாக்குதல் தொடரும் - இங்கிலாந்து
ஆப்கானிஸ்தான் மீது குளிர்காலத்திலும் தாக்குதல் தொடரும் என்று இங்கிலாந்து துணைப் பிரதமர் ஜான் பிரஸ்காட்கூறியுள்ளார்.
இதற்காக அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுப் படையினர் அனைத்து வகையிலும் தயாராகி வருகிறார்கள் என்றும்அவர் கூறினார்.
முஸ்லீம்களின் புனித மாதமாகிய ரம்ஜான் பிறந்தாலும் தலிபான்களின் மீதான அமெரிக்காவின் தாக்குதல்தொடரும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ரம்ஸ்பீல்ட் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications