ஈரோடு: மருமகளை கொன்ற மாமியாருக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு:
ஈரோடு சென்னிமலை அருகே மருமகளை வெட்டிக் கொன்ற மாமியாருக்கு ஆயுள் தண்டனை வழங்கிதீர்ப்பளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் 2பேரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இவர்கள் வீட்டுக்கு மாவு பாக்கெட் விற்பனை செய்ய வரும் தேனியைச் சேர்ந்த கருப்பையாவுக்கும்சரஸ்வதிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதையத்து திடீரென ஒருநாள் சரஸ்வதி தான் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவரை விட்டுவிட்டுகருப்பையாவுடன் தேனிக்குச் சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
பிறகு சில நாட்கள் கழித்து குப்புசாமி தனது மனைவியிடம் பேசி மீண்டும் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.ஆனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து குப்பு சாமியின் தாயார் லெட்சுமி,சரஸ்வதியின் மீது கோபம் கொண்டு அவ ரை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
சென்னிமலை போலீசார் லட்சுமியைக் கைது செய்து ரோடு 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன் லெட்சுமிக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications