அதிமுக அராஜகத்தை எதிர்த்து 3ம் தேதி காங்கிரஸ் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுகவினரின் அராஜகத்தை எதிர்த்து வரும் 3ம் தேதி காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரப் போராட்டம்நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் இன்று (புதன்கிழமை) நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர் கூறியதாவது,
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த தினத்திலிருந்தே அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திட்டமிட்டே பல இடங்களில் அவர்கள் வன்முறையைத் தூண்டினார்கள்.
அதிமுகவினரின் ஜனநாயக விரோதப் பேக்கைக் கண்டித்து வரும் நவம்பர் 3ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இந்தப் போராட்டம் நடைபெறும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications