இந்திய அணு மையங்களில் கண்காணிப்பு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
அணு ஆராய்ச்சி மையங்களில் இருந்து புளுட்டோனியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களை (fissile material)தீவிரவாதிகள் திருடலாம் என்ற அச்சம் நிலவுவதையடுத்து இந்திய அணு சக்தி மையங்களில் கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போர்ட்டல் மானிட்டர் புதிய கருவியின் உதவியுடன் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்ள்ளது. இந்தக் கருவிகதிர்வீசும் தனிமங்களில் இருந்து வெளியேறும் காமா கதிர்களைக் கண்டுபிடித்துவிடும்.
இதனால் சில மைக்ரோ கிராம் தனிமத்தை யாராவது எடுத்துக் கொண்டு வெளியேறினால் கூட தெரிந்துவிடும் எனபாபா அணு சக்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பட்டார்சார்ஜி கூறினார்.












Click it and Unblock the Notifications