நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி ஜெ. மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
லண்டனில் ஓட்டல் வாங்கிய வழக்கில் தான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்துள்ளஉத்தரவிலருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றதில் மனு தாக்கல் செய்துள்ளார்ஜெயலலிதா.
லண்டனில் நட்சத்திர ஓட்டல் வாங்கியதாக அதிமுகவை சேர்ந்த எம்.பி.யான டி.டி.வி தினகரன் மீதும்,ஜெயலலிதாமீதும் வழக்கு உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா வரும் 5ம் தேதி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்என்று நீதிபதி அசோக்குமார் சம்மன் அனுப்பியிருந்தார்.
இந்த வழக்கில் தான் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றுகோரி ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) நீதிபதி தினகர் முன் விசராணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications