ஆப்கானிஸ்தானுக்குள் அதிரடிப் படையை அனுப்புவோம்: அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானுக்குள் ஆயிரக்கணக்கான வீரர்களை அதிரடியாக அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் அதிரடியாக ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்ப உள்ளதாக அமெரிக்கபாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்.
அவர் கூறுகையில்,
ஆப்கானிஸ்தானுக்குள் வான்வெளித் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களை அடையாளம் காண தரைப்படையை அனுப்பித்தான் ஆக வேண்டும். இதற்காக ஆயிரக்கணக்கான வீரர்கள் கடும் பயிற்சிக்குஉள்ளாக்கப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர்களில் சென்று இறங்க முயன்ற அமெரிக்கப் படைகள் தலிபான்களின் தாக்குதல் காரணமாக இறங்கமுடியாமல் திரும்பி வந்துவிட்டனர். சில நேரங்களில் காலநிலை மோசமாக இருந்ததால் ஹெலிகாப்டர்களை இயக்கமுடியவில்லை.
இதனால், வேறு வழியில் படைகளை ஆப்கானிஸ்தானுக்குள் இறக்க வேண்டும். அதற்கான நவீன தொழில்நுட்பம்தயாராகி வருகிறது.
நாளை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் இவானோவை சந்தித்துப் பேசிய பின்னர் ஆப்கானிஸ்தானைசுற்றியுள்ள நாடுகளுக்குச் செல்வேன் என்றார்.
பி-52 தாக்குதல் தொடர்கிறது:
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் மீது 27வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.
தலைநகர் காபூலை பாதுகாக்க நிறுத்தப்பட்டுள்ள தலிபான் படைகள் மீது பி-52 ரக குண்டு வீச்சு விமானங்கள் கடும்தாக்குதல் நடத்தின. இந்தப் படைகலை சிதறடிப்பதன் மூலம் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் காபூலைநெருங்க வழி செய்ய முடியும்.
இத் தாக்குதலில் தலிபான்களின் தலைமை ராணுவ அலுவலகம் தகர்க்கப்பட்டது.
நார்த்தர்ன் அலையன்சின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படைகள் வழங்கும்யோசனைகளின்படி இந்தத் தாக்குதல் நடந்து வருகின்றன.
ஒரே நேரத்தில் 60 குண்டுகளை பி-52 விமானங்கள் வீசின. இதனால் அந்தப் பகுதி முழுவதும் ஒரே வெடிச் சத்தமும்ஓலச் சத்தமும் கேட்டவண்ணம் இருந்தது.
நேற்று இரவு முழுவதும் காண்டஹாரிலும் மஸார்-ஏ-ஷெரீபிலும் குண்டுகள் வீசிக் கொண்டேயிருந்தனஅமெரிக்க விமானங்கள். பகலிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications