ராபின் மெயின் வழக்கு: காளிமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
வங்கி மோசடியில் ஈடுபட்டதாக சபாநாயகர் காளிமுத்து மீது சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்துள்ள மனுவுக்குபதிலளிக்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் காளிமுத்து அமைச்சராக இருந்தார். அப்போது ராபின் மெயின் வங்கியில்மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது சி.பி.ஐ.போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சிறப்புநீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் காளிமுத்து மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவை ஏற்று காளிமுத்துவை வழக்கில் இருந்து நீக்கி சில நாட்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் ராபின் மெயின் வங்கி மோசடி வழக்கில் இருந்து காளிமுத்துவை சிறப்பு நீதிமன்றம் நீக்கியதுசெல்லாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. போலீசார் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி தினகர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இன்னும் 2வாரத்திற்குள் இந்த மனுமீது காளிமுத்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, அதற்கான நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications