அதிமுக அரசு ஒரு வெத்து வேட்டு: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு வெத்து வேட்டாக, வெறும் புகையை மட்டுமே பரப்பி காற்றை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறது என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு கஜானா முழுவதையும் காலி செய்து விட்டு, தற்போது அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன் பணம்தருவதற்குக் கூட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
நிலைமை இப்படி இருக்கும்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்களை மட்டும் தற்போதையஅதிமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்குத் தேவையான நிதி எங்கிருந்து வரும்?
அதிமுக ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்து 6 மாதம் ஆகியும் கூட இதுவரை எந்தவித வளர்ச்சித் திட்டமும்மேற்கொள்ளப்படவில்லை. பட்ஜெட்டில் குறிப்பிட்ட எந்தத் திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றுவதற்கானஅடையாளமே தெரியவில்லை.
உழவர் சந்தைகள் பராமரிக்கப்படாமல் முடங்கிப் போயுள்ளன. இலவச வீட்டு மனைத் திட்டம், செவிலியர்கல்லூரித் திட்டம், தொழில்முனைவோருக்கான பூங்கா என ஒரு திட்டம் உருப்படியாகஅமல்படுத்தப்படவில்லை.
முதல்வர் அலுவலகத்தில் பைல்கள் மலை போல குவிந்து கிடக்கின்றன. ஒரு பைலும் கையெழுத்திடப்படாமல்அப்படியே வைக்கப்பட்டுள்ளது.
வெத்து வேட்டாக வெறும் புகையை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் அதிமுக அரசு காற்றையும் மாசுபடுத்திக்கொண்டிருக்கிறது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications