பாகிஸ்தானில் தபால் ஆந்த்ராக்ஸ்: பத்திரிக்கை அலுவலகம் மூடல்
கராச்சி:
தீவிரவாதிகளுக்கு புகலிடமும், அனைத்து வகையான உதவிகளும் வழங்கி வந்த பாகிஸ்தானுக்கே இப்போதுஆந்த்ராக்ஸ் கடிதங்கள் வர ஆரம்பித்துவிட்டன.
பாகிஸ்தான் அதிகமாக விற்பனையாகும் உருது நாளிதழ் டெய்லி ஜங்க். இந்தப் பத்திரிக்கை அலுவலகத்துக்குகடந்த வாரம் ஒரு கடிதம் வந்தது.
அந்தக் கடிதத்தைப் பிரித்தபோது அதில் வெள்ளை நிறப் பெளடர் இருந்தது. உடனடியாக சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. சோதனை முடிவுகள் நேற்று தான் வெளியானது. சோதனையில் அதில் ஆந்த்ராக்ஸ்பாக்டீரியாக்கள் இருந்தது உறுதியானது.
இதையடுத்து அந்தப் பத்திரிக்கை அலுவலகம் மூடப்பட்டுவிட்டது. அனைத்து ஊழியர்களும் சோதனைக்குஉள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அலுவலகத்தை உயிர் தொழில்நுட்பவியல் வல்லுனர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கடிதம் மூலம் ஆந்த்ராக்ஸ் பரப்பப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications