சென்னையில் டிக்கெட் முன்பதிவில் புதிய முறை அறிமுகம்
சென்னை:
சென்னையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் முன்பதிவு வசதி கொண்ட ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்கச் செல்பவர்கள் நீண்ட வரிசையில்காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.
தற்போது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சென்னை திருமயிலை ரயில் நிலையத்தில் உள்ளடிக்கெட் முன்பதிவு மையத்தில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, வங்கிகளில் டோக்கன் கொடுப்பது போல இங்கும் டோக்கன் கொடுக்கிறார்கள். அதை வாங்கிக்கொண்டு சேர்களில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். நமது எண்ணை மைக்கில் அழைக்கும்போது எழுந்து போய்டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் கால் கடுக்க நிற்பதோ, கியூவின் நடுவே யாரும் நுழைந்து விடுவார்களோ என்று விழிப்புடன்இருப்பதற்கோ அவசியமே இல்லை. இந்தப் புதிய முறை பரீட்சார்த்தமாக திருமயிலை ரயில் நிலைய கம்ப்யூட்டர்முன்பதிவு மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ரயில் நிலைய அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications