சாப்ட்வேர்: இன்னும் சிறிது காலம் சிரமம் தான்
பெங்களூர்:
சாப்ட்வேர் துறைக்கு இன்னும் சிறிது காலம் சிரமமானதாகத் தான் இருக்கும் என சாப்ட்வேர் வல்லுனர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.
"அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியால் இந்திய சாப்ட்வேர் துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம்" என்றதலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்நந்தன் நில்கேனி,
சாப்ட்வேர் துறையில் இன்னும் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு சீனாதான் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக விளங்கும்.அவர்கள் போட்டியை எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் நாம் திறமைகளை 2 ஆண்டுகளுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின் வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருக்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களை அதிகமாக அணுக மாட்டார்கள். ஆனாலும் தகவல்நுட்பத்தில் சீனா அதிகக் கவனம்செலுத்தி வருவதால் அவர்கள் இந்தியாவுக்கு கடும் போட்டியை தோற்றுவிப்பார்கள்.
எனவே இந்தியாவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொண்டுசமாளிக்க தேவையான திறமைகளை அதிகப்படுத்திக் கொள்ள முயல வேண்டும் என்றார்.
பிற சாப்ட்வேர் வல்லுனர்களும் பொருளாதார வல்லுனர்களும் பேசுகையில், அமெரிக்காவால் ஏற்பட்டுள்ளபொருளாதார சீரமைப்பால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிரமமான நிலையை தொடர்ந்து சமாளிக்கவேண்டியிருக்கும்.
இதனால் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் உள்ள சாப்ட்வேர் தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளஇந்திய நிறுவனங்கள் தயாராக வேண்டும். அந் நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில்வர்த்தக, மார்க்கெட்டிங் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
ஸ்டான்போர்ட் பல்கலை கழக பேராசிரியர் சி. ராம் அகேலா கூறுகையில், அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனங்கள்எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு அதன்படி இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள்செயல்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications