ரவுடி வீரமணியைச் சுட்டுப் பிடிக்க உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல ரவுடி வீரமணியைப் பிடிக்கும் போது போலீசார் சந்திக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரைச்சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் கூறினார்.

சென்னையில் நேற்று(வியாழக்கிழமை) இதுகுறித்து பேட்டியளிக்கும்போது அவர் மேலும் கூறியதாவது:

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சாட்சி சொல்ல வந்த ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில்வீரமணியைத் தேடி வருகிறோம். இதற்காக 10 தனிப்படைப் போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.

வீரமணி முதலில் பாண்டிச்சேரிக்கும், மகாபலிபுரத்திற்கும் இடைப்பட்ட பகுதிக்குப் படகு மூலம் தப்பிச் சென்றதாகஎங்களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் படை அந்த இடத்துக்கு விரைந்து சென்றது, ஆனால் வீரமணிதப்பிச் சென்றுவிட்டான்.

மேலும் சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வரையுள்ள கடற்கரையோரப் பகுதிகளிலும், மீன்பிடிக் குப்பங்களிலும்போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் வீரமணி பிடிபடுவான் அவனைப் பிடிப்பதற்கு ஷூட்டிங் ஆர்டர்போடப்படவில்லை. ஆனால் போலீசார் சந்திக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அவனைச் சுட்டுப் பிடிக்கவும்உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையில் ரவுடியிசம் அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால் தற்போது அதைஅடக்கும் முயற்சியில் போலீஸ் தீவிரமாக இறங்கியுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மட்டும் சென்னையில் 50ரவுடிகளைக் கைது செய்துள்ளோம் என்றார் முத்துக்கருப்பன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+