அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 4 வீரர்கள் காயம்
வாஷிங்டன்:
அமெரிக்க ஹெலிகாப்டர் நேற்று ஆப்கானிஸ்தானுக்குள் விபத்துக்குள்ளானது. இதில் 4 வீரர்கள்படுகாயமடைந்தனர். வீரர்களை உடனடியாக மீட்ட அமெரிக்கப் படைகள் அந்த ஹெலிகாப்டரை குண்டுவீசித்தாக்கி அழித்தன.
இது குறித்து பென்டகன் கூறுகையில், வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இந்த ஹெலிகாப்டர் மோசமானவானிலையில் சிக்கியது. கடும் மழை காரணமாக இந்த ஹெலிகாப்டர் மேற்கொண்டு பறக்க இயலாமல்தடுமாறியது. இதையடுத்து அதை விமான அவசரமாகத் தரை இறக்கினார்.
இதில் அந்த ஹெலிகாப்டர் தரையில் மோதி பலத்த சேதமடைந்தது. இதில் இருந்த 4 வீரர்களும்படுகாயமடைந்தனர்.
உடனடியாக மீட்பு ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்தன. காயமடைந்த வீரர்களை மீட்டனர்.
சேதமடைந்த ஹெலிகாப்டரை அங்கிருந்த மீட்க முடியவில்லை. அதை அங்கேயே விட்டுவைத்தால் தலிபான்கள்கையில் சிக்கிவிடும் என்பதால் அதை உடனடியாக அழிக்க உத்தரவிடப்பட்டது.
யு.எஸ்.எஸ்.ரூஸ்வெல்ட் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற எப்-14 ரக விமானங்கள் இந்தஹெலிகாப்டர் மீது குண்டுகளை வீசி தூள் தூளாக்கி முழுமையாக அழித்தன.
இந் நிலையில் இந்த ஹெலிகாப்டர் தலிபான்களின் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளின் தாக்குதலில் தான் தரையில்விழுந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.