திமுக கூட்டணியில் பா.ம.க. தொடரும் - ராமதாஸ்
திண்டிவனம்:
திமுகவுடன் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின்செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றன.
கூட்டத்தில் கலந்துகொண்ட ராமதாஸ் நேற்று (சனிக்கிழமை) நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது:
செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.கவின் வெற்றி தோல்வி பற்றிவிவாதிக்கப்பட்டது.
தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் பா.க.சார்பாகப் போட்டியிட்ட நகராட்சித் தலைவராகஒருவரும், பேருராட்சித் தலைவராக 7 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர மாவட்ட பஞ்சாயத்துமற்றும் ஒன்றிய கவுன்சிலராக பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு காரணமாக கூட்டணித் தலைவர்கள் பல காரணங்களைக்கூறி வருகின்றனர். ஆனால் நான் எங்கள் கருத்தைச் சொல்லி யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கும் என்றார் ராமதாஸ்.