ஆப்கானிஸ்தான் சிறைகளில் நிரம்பும் தலிபான் எதிர்ப்பாளர்கள்
பெஷாவர்:
தலிபான் ஆட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்களைக் கைது செய்து, அவர்களை ஆப்கானிஸ்தான் சிறைகளில்தலிபான்கள் நிரப்பி வருகிறார்கள் என்று தலிபான்களால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட பிரான்ஸ்நாட்டு பத்திரிக்கையாளர் கூறினார்.
கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி, அத்துமீறி ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்ததாக பிரான்ஸ் நாட்டில்வெளியாகும் பாரிஸ் மேட்ச் என்ற பத்திரிக்கையின் நிருபர் மைகேல் பெய்ரார்டு மற்றும் 2 பாகிஸ்தானியநிருபர்களை தலிபான் ராணுவத்தினர் கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரும் ஜாலலாபாத்தில் உள்ள சிறையில் வைக்கப்பட்டு, 25 நாட்களுக்குப் பிறகு விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பெய்ரார்டு கூறுகையில்,
நான் முஸ்லீம்களைப் போல புர்கா அணிந்துகொண்டு ஆப்கான் எல்லைக்குள் நுழைந்தபோது தலிபான்ராணுவத்தினர் என்னைக் கைது செய்தனர்.
நான் சிறையிலிருந்த போது நாள்தோறும் அங்கு பல ஆப்கான் அரசியல்வாதிகள் கைது செய்ப்பட்டுசிறையிலடைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் பலரைப் பேட்டியும் எடுத்தேன்.
கடந்த 1996ம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானில் ஆட்சியை ஏற்படுத்திய போது பல ஆப்கானியர்கள்,தலிபான்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை என்று அவர்கள் கூறினார்கள்.
தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக யாராவது செயல்படுவது போலத் தெரிந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டுசிறையிலடைக்கப்படுகிறார்கள்.
கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்பட்டபோது அந்தச் சிறையில் மொத்தம் 150 பேர்இருந்தனர். ஆனால் தற்போது அங்கு 400 பேர் உள்ளனர்.
புதிதாகச் சிறையிலடைக்கப்பட்டு வருபவர்கள் அனைவரும் அரசியல் கைதிகள். அவர்கள் அனைவரும் தலிபான்எதிர்ப்பு கொள்கை உடையவர்கள் என்று அவர்கள் கூறினார்கள்.
இன்னும் தலிபான் எதிர்ப்புக் கொள்கை உடையவர்களைக் கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றார்அந்த பிரான்ஸ் நிருபர்.












Click it and Unblock the Notifications