பிறந்தவுடன் குப்ப்ை தொட்டிக்கு வந்த ஆண் சிசு
சென்னை:
பெண் சிசுக்கள் மட்டுமே குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டு வரும் நிலையில் ஒரு அழகான ஆண் குழந்தையும் சென்னை குப்பைத்தொட்டியில் போடப்பட்டுள்ளது.
சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டுக்கு அருகே உள்ள குப்பைத் தொட்டியில்குப்பைகளைப் போட சென்றார்.
குப்பையைக் கொட்டும்போது தொட்டிக்குள் ஒரு குழந்தையின் கால் அசைவதைப் பார்த்து திடுக்கிட்டார்.
பயந்து போய் வீட்டுக்குத் திரும்பிய அவர் தனது கணவர் சீனிவாசனிடம் இதுகுறித்துக் கூறினார். சீனிவாசன் உடனடியாக குப்பைத்தொட்டிக்குப் போய் பார்த்தார். அது ஒரு ஆண் குழந்தை என்பது தெரிய வந்தது.
பிறந்து ஒரு நாளே ஆன நிலையில் குப்பைத் தொட்டிக்கு வந்து விட்ட குழந்தையை எறும்புகளும் பூச்சிகளும் கடித்துக் கொண்டிருந்தன.உடனடியாக குழந்தையை மீட்டார்.
பின்னர் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை தி.நிகர் பாலமந்திரில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications