ஸ்டாலின் சொத்துக் குவிப்பு வழக்கு: 12ம் தேதி விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகர மேயர் ஸ்டாலின் சொத்து சேர்த்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் வரும்12ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இது தொடர்பான வழக்கை செண்பக மூர்த்தி என்பவர் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இவ்வழக்கில் தானாக ஆஜராகிய ஸ்டாலின், தன் பக்கமுள்ள நியாயத்தை எடுத்துரைத்தார். இதையடுத்து இந்தவழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகற்பக விநாயகம், வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் ஸ்டாலின் மட்டுமே பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications