கைதியைக் கடத்தி கொலை: வீரமணியின் சரண்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து ரவுடி சண்முகத்தை கடத்திச் சென்று அரிவாளால் வெட்டிக் கொன்ற கும்பலின்தலைவன் அயோத்திக் குப்பம் தாதா வீரமணி நாளை நீதிமன்றத்தில் சரணடைலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் வழக்குத் தொடர்பாக சிறையிலிருந்து நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட சண்முகத்தைவீரமணியின் கும்பல் கடத்திச் சென்றது. போலீசுக்கே தெரியாமல் அவர் கடத்தப்பட்டார்.

திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் வைத்து சண்முகத்தை இக் கும்பல் வெட்டிக் கொன்றது. வீரமணியின்முன்னிலையில் தான் இந்தக் கொலை பட்டப் பகலில், நடு ரோட்டில் அரங்கேறியது.

இதையடுத்து வீரமணியை போலீஸ் தேடியது. அவர் தலைமறைவாகிவிட்டதை போலீஸ் கண்டுபிடித்தது.அவரைப் பிடிக்க தனிப படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

அவர் பாண்டிச்சேரி மூர்த்திகுப்பம் மீனவர் குடியிருப்புப் பகுதியில் மறைந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீஸ் அங்கு சென்றது. ஆனால், அவர் தப்பிவிட்டார்.

இந் நிலையில் வீரமணி தானாகவே நாகப்பட்டிணம் அல்லது கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகத் திட்டமிட்டிருப்பதாகதகவல்கள் கிடைத்துள்ளன. அவர் இப்போது காரைக்கால் பகுதியில் மீனவர்கள் உதவியுடன் மறைந்திருப்பதாகக்கூறப்படுகிறது.

முதலில் வீரமணியைத் தப்ப வைக்க சில ஆளும்கட்சி அரசியல் பெரும்புள்ளிகள் முயன்றனர். ஆனால், ஏற்கனவேபல வன்முறைகள் தொடர்பாக நீதிபதிகளிடம் கண்டனம் பெற்றுள்ளதால் முதலில் அவரை சரணடைய வைத்துபிறகு காப்பாற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று மாலை அல்லது நாளை வீரமணி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது.

சென்னை திமுக பேரணியில் போலீஸ் மற்றும் அதிமுகவினர் உதவியுடன் கொலை வெறித் தாண்டவமாடினார்வீரமணி என்பது குறிப்பிடத்தக்கது. பார்ப்பவர்களை எல்லாம் இவரது ஆட்கள் வெட்டிச் சாய்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+