குடிசைமாற்று வாரியத் தலைவரானார் பாலகங்கா
சென்னை:
சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற பாலகங்காகுடிசை மாற்று வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வாரியத் தலைவர்களாக அத்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளே இருந்து வந்தனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு அரியலூர் அதிமுக எம்.எல்.ஏ. இளவழகன் சுற்றுலா வாரியத் தலைவராகநியமிக்கப்பட்டார். 6 மாதங்களுக்குப் பின் தற்போது அவரும் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலகங்கா,குடிசைமாற்று வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்டு, திமுக வேட்பாளர் ஸ்டாலினிடம் தோற்றவர் ஆவார். இவர் கடந்தமுறை அதிமுக ஆட்சியில் இருந்த போது, வீட்டுவசதித் துறைத் தலைவராக இவர் இருந்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications