பாண்டிச்சேரி: அமைச்சர்கள் பதவியேற்பு விழா ரத்து
பாண்டிச்சேரி:
நாளை நடைபெறுவதாக இருந்த புதுவை அமைச்சர்கள் பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 27ம் தேதி பாண்டிச்சேரியில் புதிய முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். அப்போதுஅமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
புதுவை காங்கிரஸ் கட்சியில், கண்ணன் தலைமையிலான புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சி 4 எம்.எல்.ஏக்களுடன்இணைந்தது. மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் காங்கிரசில் இணைந்தனர். இதனால் 30 உறுப்பினர்களைக்கொண்ட பாண்டிச்சேரி சட்டமன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் பலம் 17 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் 3 அமைச்சர்கள் நாளை (புதன்கிழமை) பதவியேற்பதாக, முதல்வர் ரங்கசாமி, புதுவை துணை நிலையஆளுநர் ரஜனி ராயிடம் கடிதம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுவந்தன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு 2 அமைச்சர் பதவியும், கண்ணன் கட்சியிலிருந்து வந்தவர்களில்ஒருவருக்கு அமைச்சர் பதவியும் அளிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் இன்று திடீரென பதவியேற்பு விழா ரத்துசெய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் நியமனத்தில்ஏற்பட்டுள்ள சிக்கலை அடுத்து, பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், பதவியேற்பு விழாவிற்கான மறுதேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications