Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ரயில் நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய வாலிபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீரென ஒரு வாலிபர் நிர்வாணமாக ஓடியதால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.

வெளிநாடுகளில் விளையாட்டு நடக்கும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் திடீரென "வித்தவுட்"டில் ஓடிமக்களை நிலைகுலைய வைப்பது சகஜமான நகழ்ச்சிகள். அது போன்ற ஒரு சம்பவம் இந்தியாவின்மெட்ரோபாலிடன் நகரங்களில் ஒன்றான சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

கேரள மாநிலம் ஆலப்புழையிலிருந்து சென்னைக்கு வரும் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போலசெவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. அதிலிருந்துஇறங்கிய ஒரு வாலிபர் ரயிலிலிருந்து இறங்கி பிளாட்பாரத்தில் அமர்ந்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் அங்கிருந்து எழுந்து தனது உடைகளை களையத் தொடங்கினார். பிறந்தகுழந்தையின் நிலைக்கு மாறிய அவர் அங்கிருந்து தாறுமாறாக ஓடத் தொடங்கினார். அவரது செயலைப் பார்த்துரயில் நலையத்தில் இருந்தவர்கள் நடுநடுங்கிப் போய் அங்கிருந்து ஓடினர்.

இதற்கான காரணத்தை அறியாதவர்கள் ரயில்நிலையத்தில் வெடிகுண்டு தான் வைப்பட்டுள்ளது என்று தவறாகநினைத்து அவர்களும் தாறுமாறாக ஓடினார்கள்.

அதனால் ரயில் நிலையத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய அந்த நபரை போலீஸார் விரட்டிப் பிடித்து "ஆடைதானம்" வழங்கி அவரை அடக்கினர். விசாரித்தபோது அந்த நபர் சரிவர பேசவில்லை. மன நிலை சரியில்லாதவர்என்பது பின்னர் தெரிய வந்தது.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் அவரை போலீஸார் கொண்டு போய் சேர்த்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+