போனஸ்: தாமதமாகிறது 2ம் கட்ட பேச்சுவார்த்தை
சென்னை:
போக்குவரத்து ஊழியர்களுடன் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்னும் அரசிடமிருந்துஅழைப்பு வராததால் இந்தப் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கும் தொழிற்சங்க பிரமுகர்களுக்கும் இடையேபோனஸ் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதனால் பேச்சுவார்த்தை இன்று தொடர்ந்து நடைபெறும் என்று நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார். ஆனால்இன்று பிற்பகல் வரை அரசிடமிருந்து எந்த அழைப்பும் வராததால், தொழிற்சங்க பிரமுகர்கள்ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தாமதமாகியுள்ளது.
தமிழகத்தில் பணிபுரியும் 1 லட்சத்து 15 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகித போனசும்,11.67 சதவிகித கருணைத் தொகையும் சென்ற ஆண்டு வழங்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், போனஸ் கொடுப்பதே சந்தேகமாகஇருக்கிறது.
இதையடுத்து பேச்சுவார்த்தை மூலமாவது போனஸ் கிடைக்குமா என்ற நம்பிக்கையுடன்தான் தொழிற்சங்கபிரமுகர்கள் இருந்தனர். ஆனால் அதுவும் தாமதமாகிக் கொண்டே செல்கிறது.












Click it and Unblock the Notifications