பள்ளிக் கட்டடம் கட்ட ஓய்வூதியத்தை நன்கொடையாக வழங்கிய அரசு ஊழியர்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்காக தன்னுடைய ஓய்வூதியத் தொகை ரூ.10லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சென்னை நெல்பேட்டையைச் சேர்ந்தவர் தி.நெ. முத்துக்குமாரசாமி. தமிழகக் கருவூலக் கணக்குத் துறையில் கணக்குஅலுவலராக 36 ஆண்டுகள் பணியாற்றி சமீபத்தில்தான் அவர் ஓய்வு பெற்றார்.
இவருக்கு ஓய்வூதியத் தொகையா ரூ.10 லட்சம் கிடைத்தது. இத்தொகையை குரோம்பேட்டை லட்சுமிபுரம் அரசுஉயர்நிலைப் பள்ளிக்கு நான்கு வகுப்பறைகள் கட்டுவதற்காக நன்கொடையாக அளித்தார் முத்துக்குமாரசாமி.
இதற்கான காசோலையை அமைச்சர்கள் பா. வளர்மதி மற்றும் தம்பித்துரை ஆகியோர் முன்னிலையில்,அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஆர். விஜயலட்சுமியிடம் முத்துக்குமாரசாமி நேற்று (செவ்வாய்க்கிழமை)வழங்கினார்.
கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் அரசு ஊழியர் ஒருவர் தன்னுடைய ஓய்வூதியத் தொகையை பள்ளிக் கட்டடம்கட்டுவதற்காக நன்கொடையாக அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனால் தமிழக அரசு முத்துக்குமாரசாமியைப் பாராட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications