சுறா பிடிக்க தடையை நீக்க மத்திய அரசுக்கு கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுறா, திருக்கை உள்பட 52 வகை மீன்களைப் பிடிப்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க தமிழக அரசுஉரிய நடவடிக்கை எடுக்கும் என்று மாநில மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 52 வகை மீன்களைப் பிடிப்பதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதனால் பலனடையப் போவது வெளிநாட்டினர்தான்.
இந்தத் தடை மூலம் அன்னியச் செலாவணியில் பெரும் பாதிப்பும் ஏற்படும். மேலும் தமிழக விவசாயிகளின்நலனும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை மீன்களை நாம் பிடித்து ஏற்றுமதி செய்தால் நமக்கு நல்ல அன்னியச் செலாவணி கிடைக்கும். இப்போதுதடை காரணமாக அதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்தத் தடையை நீக்க மத்திய அரசை மாநில அரசு கேட்டுக் கொள்ளும் என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications