ஜெ.க்கு கொலை மிரட்டல் - பாஜக கவலை
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தீவிரவாதிகள் இ-மெயில் மூலம் விடுத்துள்ள கொலை மிரட்டலைஅலட்சியப்படுத்தக் கூடாது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இல. கணேசன்கூறியுள்ளார்.
இதைப் பற்றி தீவிர விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தமிழகஅரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து இன்று (புதன்கிழமை) சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியின் போது கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு தமிழ் தீவிரவாதிகள் விடுத்துள்ள கொலை மிரட்டல் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. இது குறித்துதீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
முன்பு ராஜ்குமார் கடத்தல் சம்பவம் போதும் பாண்டிச்சேரியிலிருந்து செய்திகள் வந்தன. இப்போதுஜெயலலிதாவுக்கு விடுத்துள்ள கொலை மிரட்டல் இ-மெயிலும் பாண்டிச்சேரியிலிருந்துதான் வந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இனி எந்த தலைவரும் தீவிரவாதிகளால்கொல்லப்படக்கூடாது.
தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சிகளும்ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார் கணேசன்.












Click it and Unblock the Notifications