குமரிக் கடலில் கொந்தளிப்பு.. மழை நீடிக்கிறது
சென்னை:
கன மழை காரணமாக கன்னியாகுமரி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலுக்குள் மீனவர்கள்யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வங்கக் கடலில் வடக்கே குறைந்த காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையும்தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் கன மழை பெய்து வருகிறது.
இந்த கன மழை அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணிஅணை நிரம்பி விட்டது. இதைத் தொடர்ந்து அணை மூடப்பட்டு விட்டது.
மேலும், கடலுக்குள் கொந்தளிப்பான நிலை இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.
வேலூரில் மழை காரணமாக 575 கிலோமீட்டர் தொலைவிலான சாலைகள் சேதமடைந்துள்ளன. இவற்றைபழுதுபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையிலும் புதன்கிழமை காலை முதல் மழை தூறி வருகிறது.












Click it and Unblock the Notifications