இன்று அமெரிக்கா செல்கிறார் வாஜ்பாய்
மாஸ்கோ:
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர்வாஜ்பாய் மாஸ்கோவிலிருந்து இன்று (புதன்கிழமை) அமெரிக்கா செல்கிறார்.
பின்னர் வரும் 10ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் வாஜ்பாய் உரை நிகழ்த்துவார்.
இந்திய-அமெரிக்க உறவில் வளர்ச்சி:
கடந்த செப்டம்பர் 11ம் தேதி தாக்குதலுக்குப் பிறகு இந்திய-அமெரிக்க நட்புறவு மேலும் பலப்பட்டுள்ளது என்றுவாஷிங்டனிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு வாஜ்பாய் சுற்றுப் பயணம் மேற்கொள்வதையொட்டி இந்திய தூதரக அதிகாரிகள் நிருபர்களுக்குஅளித்த அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
உலகம் முழுவதிலுமுள்ள தீவிரவாதத்தை ஒழிப்பதில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்பதில்அவை எடுக்கும் முயற்சிகளும் மேம்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
முஷாரப்பை சந்திக்க மீண்டும் வாஜ்பாய் மறுப்பு:
இதற்கிடையே, அமெரிக்காவிற்கு வருகை தரும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடன் பேசத் தயாராகஇல்லை என்று வாஜ்பாய் மீண்டும் கூறியுள்ளார்.
இந்திய எல்லைப் பகுதிகளில் தன் ராணுவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் குவித்து வருகிறது. அப்பகுதிகளில் சகஜநிலைமை ஏற்படும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார் வாஜ்பாய்.












Click it and Unblock the Notifications