வடக்கு ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டு தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
க்வாஜ் பகவுதீன் (வடக்கு ஆப்கானிஸ்தான்):
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிலைகளின் மீது இன்று (வியாழக்கிழமை) காலை அமெரிக்கவிமானங்கள் கடும் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
உயரமாகச் சென்று தாக்கவல்ல பி-52 ரக விமானங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன.
இதற்கிடையே நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரும் மசார்-ஏ-ஷரீப் நகரைக் கைப்பற்றுவதற்காக படிப்படியாகமுன்னேறி வருகின்றனர். ஆனால் மிக மெதுவாகத்தான் முன்னேறி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் விமானத் தாக்குதல் மேலும் தீவிரமானால்தான், தங்களால் வேகமாக முன்னேற முடியும் என்றும்நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications