சத்துணவில் முட்டை நிறுத்தம் ... நாமக்கல்லில் 4 லட்சம் முட்டைகள் தேக்கம்
சென்னை:
சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த இலவச முட்டை நிறுத்தப்பட்டு விட்டதால் நாமக்கல் பகுதியில் முட்டைவிற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு இலவச சத்துணவு வழங்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்துவக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. சத்துணவுடன் முட்டையும் சேர்த்து கொடுக்கப்பட்டுவந்தது.
இந்த நிலையில் இப்போதைய அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டு கொண்டக்கடலை போன்றவைவழங்கப்படுகின்றன.
தமிழகத்தின் முட்டைத் தேவையில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை பூர்த்தி செய்வது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் தான்.
இப்போது, திடீரென முட்டை வழங்குவதை நிறுத்தி விட்டதால் நாமக்கல் பகுதியில் முட்டை விற்பனை கடும் வீழ்ச்சியைச்சந்தித்துள்ளது. பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த முட்டை நிறுத்தப்பட்டதால் தற்போது அங்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டமுட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
அதிக அளவில் முட்டைகள் தேங்கி விட்டதால் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் கோழிப்பண்ணை தொழில்பாதிக்கப்படும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மீண்டும் சத்துணவுடன் முட்டையும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.