பொது இடங்களில் "தம்" அடித்தால் தண்டனை உறுதி
சென்னை:
பொதுஇடங்களில் புகைபிடிக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்திருப்பதை அடுத்து, சென்னையில் பொது இடங்களில்புகைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர்முத்துக்கருப்பன் கூறினார்.
சென்னையில் இதுகுறித்து இன்று நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் அவர் மேலும் கூறியதாவது,
பொது இடங்களில் புகைபிடிக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்திருப்பதை அடுத்து, தமிழக அரசு பொது இடங்களில்புகைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இதுபோல மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், நூலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில்புகைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள், பாண்டிச்சேரியிலிருந்து தான் அந்தஇ-மெயிலை அனுப்பியுள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலில் ஈடுபட்டவர்கள்தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்கள். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள்.
மேலும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பவர்கள், இரவு 10 மணியிலிருந்து, காலை 6 மணிவரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீதும் கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.