விமானங்களைக் கடத்த முயற்சி: சென்னை விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு
சென்னை:
அமெரிக்காவில் விமானத்தைக் கடத்தி தாக்குதல் நடத்தப்பட்டதைப் போல் தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்திதாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் ஆட்கள் காத்மண்டுவில் பதுங்கியிருப்பதாகவும், அவர்கள் நேபாளவிமானங்களைக் கடத்தி, டெல்லியில் உள்ள முக்கியக் கட்டடங்களைத் தாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஒருமிரட்டல் தகவல் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்தது.
இத்தகவலை உடனடியாக நேபாள விமானத் துறை அதிகாரிகளுக்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள்அனுப்பிவிட்டனர். இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்கும் இது பற்றிய தகவல்தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த சிவில் விமானப்போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமானநிலையத்துக்கு உள்ளே வரும் பயணிகளிடமும் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் பயணிகளிடமும் தீவிரசோதனை மேற்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications