பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரி மீது தாக்குதல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தேவேந்திர குமார் குப்தா நேற்று (வியாழக்கிழமை) மாலைபாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரைச் சராமாரியாக அடித்த அவர்கள், பின்னர் அவரைக் கடத்திக் கொண்டு போய்விட்டனர்.பாகிஸ்தான் உளவுத் துறை அமைப்பினர்தான் அவரைக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்ட சமரசப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மூன்று மணி நேரத்திற்குப்பின்னர் குப்தா விடுவிக்கப்பட்டார்.
தூதரகத்தைக் காலி செய்து, பாகிஸ்தானை விட்டே அவர் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியேற வேண்டும் என்றுஇரண்டு நாட்களுக்கு முன்னர்தான் பாகிஸ்தான் அவருக்கு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குப்தா தாக்கப்பட்டதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், லாகூரிலிருந்து டெல்லிக்கு பஸ் மூலம் சென்றுகொண்டிருக்கும் போது, தான் மிரட்டப்பட்டதாகக் கூறி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் இனாமுல்ஹக்கிடம் இந்தியத் தூதர் வி.கே. நம்பியார் புகார் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications