சிவகாசியில் தொடரும் குழந்தைத் தொழிலாளர்கள் கொடுமை
சென்னை:
சிவகாசி, விருதுநகர் போன்ற இடங்களில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் குழந்தைத்தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்று குழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
இவ்வாறு குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும்,வறுமை காரணமாக குழந்தைகள் வேலைக்குச் செல்கின்றன.
குறைந்த சம்பளத்தில் வேலையாட்கள் கிடைப்பதால் முதலாளிகளும், குழந்தைத் தொழிலாளர்களைஆதரிக்கின்றனர். இதைத் தடுத்து நிறுத்த குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு இயக்கம் போராடி வருகிறது.
இந்த இயக்கம் சமீபத்தில் விருநகர் மாவட்டம் சிவகாசியில் நடத்திய கணக்கெடுப்பில், இன்னும் குழந்தைத்தொழிலாளர்கள் எண்ணிக்கை அந்தப் பகுதியில் குறையவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே இதற்குத் தக்க நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்று அந்த இயக்கத்தின் சார்பில் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில் துறைச் சட்டத்தின் மூலம், இதுபோல குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முதலாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications