காபூலில் அமெரிக்க விமானங்கள் குண்டு மழை
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை அமெரிக்க விமானங்கள் இரண்டுகுண்டுகளை வீசின.
ஆனால் இத்தாக்குதலின்போது தலிபான் படையினர் பதில் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் தெற்கு நகரமான காண்டஹாரிலும் அமெரிக்க விமானங்கள் குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
வடக்கில் தலிபான்களின் கைவசமுள்ள மசார்-ஏ-ஷெரீப் நகர் மீது நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் கடும்தாக்குதலை நடத்தியுள்ளனர். விரைவில் அந்நகரைக் கைப்பற்றி விடுவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலை நோக்கி 3 ஜப்பானிய போர்க் கப்பல்கள் விரைவு
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் நடத்தி வரும் அமெரிக்கத் தாக்குதலுக்கு ஆதரவாக ஜப்பானிலிருந்து இந்தியப்பெருங்கடலை நோக்கி மூன்று போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன.
குராமா, கிரிசேம் மற்றும் ஹமானா என்று அழைக்கப்படும் இந்த போர்க் கப்பல்கள் அடுத்த இரண்டு வாரங்களில்இந்தியப் பெருங்கடலை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1945 இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு ராணுவத் தாக்குதலுக்கு ஆதரவாக ஜப்பான் போர்க் கப்பல்களைஅனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications