இலங்கை: "ரூபவாஹினி" தலைவர் ராஜினாமா
கொழும்பு:
எதிர்கட்சிகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு இலங்கை அரசுக்குச் சொந்தமான "ரூபவாஹினி" டிவி நிறுவனத்தைப்பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்ட அதன் தலைமை அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளின் தரத்தைக் குறைக்கும் வகையிலும்உள்ள பிரச்சாரங்கள் டிவியில் இடம்பெறுகின்றன. இதற்குக் காரணம் டிவி நிலைய அதிகாரியான சனத் குணதிலகேதான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் இவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) குணதிலகே தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் அதிபர்சந்திரிகாவுக்கு செய்தித் தொடர்பு ஆலோசகராகவும் இருந்தவர். மேலும் சந்திரிகாவின் நம்பிக்கையைப் பெற்றஅதிகாரிகளில் இவரும் ஒருவராக இருந்தார்.
ஆனால் சமீபத்தில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணிக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற முக்கியத்தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார் என்றும், சந்திரிகா தலைமையிலான அரசு கவிழ்வதற்குமுக்கிய காரணம்இவர் தான் என்றும் கூறப்பகிறது.
இருப்பினும் தனது ராஜினாமா குறித்து இதுவரை குணதிலகே எதுவும் விளக்கம் அளிக்கவில்லை. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு டிவி நிலையத்தில் இவருக்கு அடுத்த பொறுப்பில் இருந்த வஜிரா நரம்பனவா என்றஅதிகாரியும், தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு சந்திரிகா சவால்
1987ல் அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கும் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைப் போல, இப்போது விடுதலைப் புலிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர்விக்ரமசிங்கே ஒரு ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியுமா என்று இலங்கை அதிபர் சந்திரிகா கேட்டுள்ளார்.
தனி ஈழம் வேண்டும் என்று போராடி வரும் விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அவர் ஆதரிக்கிறாரா என்பதுகுறித்தும் விக்ரமசிங்கே விளக்க வேண்டும் என்றும் சந்திரிகா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications