நெல்லை மேயர் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் வழக்கு
திருநெல்வேலி:
திருநெல்வேலி மேயராக அதிமுகவின் ஜெயராணியைத் தேர்ந்தெடுத்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரிதிமுகவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஜெயராணி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தலித் என்ற போதிலும், அவர் தன்னுடைய வேட்பு மனுவில் இந்து தலித்என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அம்மனு தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து, மேலும் ஐந்து அதிமுகவினர் கடைசி நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனாலும்ஜெயராணியின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட்டு, 10,627 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவேட்பாளரும் முன்னாள மேயருமான மு. உமாமகேஸ்வரியைத் தோற்கடித்து, திருநெல்வேலி மேயரானார்.
இந்நிலையில், திருநெல்வேலி மேயராக ஜெயராணி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து திமுக வழக்கறிஞரான வே.பொன்னம்பலநாதன் என்ற துரை திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றைத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவின் விவரம்:
பிறப்பால் கிறிஸ்தவராகவும் பின்னர் இந்துவாகவும் மாறிய ஒருவருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் அளிக்கப்படக்கூடாது என்று கடந்த 1996 ஜனவரி 25ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே. ராமசாமியும் ஜி.எஸ். பட்நாயக்கும்தீர்ப்பளித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி, கடந்த 2001 பிப்ரவரி 20ம் தேதி அனைத்து வட்டாட்சியர்களுக்கும்கோட்டாட்சியர்களுக்கும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பியுள்ளார்.
ஆனால், மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயராணியின் பெற்றோர் இன்றைக்கும் கோவில்பட்டி-சேகரத்தில்உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் சங்கப் பணம் செலுத்தி வருகின்றனர். ஜெயராணியின் மாமனார்-மாமியார் கூடபாளையங்கோட்டை தேவாலயத்தில் சங்கப் பணம் செலுத்தி வருகின்றனர்.
இதனால், தலித் இந்துக்களுக்கான சலுகையைப் பெறுவதற்கு ஜெயராணிக்கு எந்தவித உரிமையும் கிடையாது.அவர் திருநெல்வேலி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றுபொன்னம்பலநாதன் தன் மனுவில் கூறியுள்ளார்.
நீதிபதி பானுமதி இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதேபோல், திமுக சட்டத் துறைச் செயலாளர் அ.லெ. சுப்பிரமணியன் மற்றும் வழக்கறிஞர் ஜெயபால் ஆகியோரும்ஜெயராணியின் தேர்வை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications