பெரம்பலூரில் ரூ.1.5 கோடியில் விபத்து சிகிச்சைப் பிரிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருச்சி, சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதால்காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வசதியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் விபத்துமற்றும் காய சிகிச்சைப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

திருச்சி, சென்னை நெடுஞ்சாலை மிகவும் ஆபத்தான நெடுஞ்சாலையாக மாறியுள்ளது. குறிப்பாக பெரம்பலூர்அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. தினசரி குறைந்ததுஐந்து விபத்துக்களாவது நடப்பது வழக்கம்.

ஆனால் விபத்தில் காயமடைந்தவர்களை திருச்சி மருத்துவமனைக்குக் கொண்டு போய்த்தான் சிகிச்சை அளிக்கவேண்டியுள்ளது. அருகில் உள்ள பெரம்பலூர் மற்றும் அரியலூர் அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும்சிகிச்சைப் பிரிவுகள் இல்லை.

இந்நிலையைப் போக்க தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் சிகிச்சைப் பிரிவைத்துவக்க மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.1 கோடியே 50 லட்சம் நிதியும்ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ராஜாவின் யற்சியின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு அரியலூர் மருத்துவமனையில் இதேபோன்ற ஒரு பிரிவு துவக்கப்படும் என்று சுகாதாரத்துறைவெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+