சென்னையை ஸ்தம்பிக்க வைத்த அடை மழை
சென்னை:
சென்னையில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்குத் துவங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னைநகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தகாற்றழுத்த மண்டலம் காரணமாக புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால்இரண்டு நாட்களுக்கு கன மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் வியாழக்கிழமை சென்னை புறநகர் முழுவதும் நல்ல மழை பெய்தது. ஆனால் இரவில் சென்னைநகருக்குள் கன மழை பெய்யத் தொடங்கியது. அது வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை நிற்காமல் நீடித்துவருகிறது.
இந்தக் கன மழையால் நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கி விட்டன. அண்ணா சாலையின் பலபகுதிகளில்வெள்ள நீர் தேங்கியுள்ளது.
பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாழக்கிழமை இரவு முழுவதும்அப்பகுதிகளில் மின்சாரம் இல்லை. பல இடங்களில் கட்டிட சுவர்கள் போன்றவை இடிந்து விழுந்தன.
இந்த மழையால் பல பாதிப்புகள் இருந்தாலும், சென்னை குடிநீர்ப் பிரச்சினைக்கு இந்த மழை நீர் உதவும் என்றநம்பிக்கையும் சென்னை மக்களிடம் உண்டு.












Click it and Unblock the Notifications