சென்னை: ரோட்டில் "தம்" அடித்த 1,000 பேர் கைது
சென்னை:
சென்னையில் பொது இடங்களில் புகைபிடித்ததாக ஒரே நாளில் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கோயம்புத்தூர், சென்னை மதுரை உள்ளிட்ட முக்கியநகரங்களில், பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
சென்னையில் நேற்றிலிருந்து 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
சென்னையில் பொது இடங்களில் புகைபிடித்துக் கொண்டிருந்த 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோர்ட் விதிக்கும் அபராதத்தை செலுத்திய பிறகுவிடுவிக்கப்படுவார்கள்.
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.500 வரை கேர்ர்ட் அபராதம் விதிக்க இயலும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications