தஞ்சையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தற்கொலை
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே கடன் தொல்லை காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டிணம் அருகே உள்ள தில்லை நகரைச் சேர்ந்தவர் மனோன்மணி. இவர் தனது தாய்இந்திரா, மகன் கண்ணன், மகள் கலா ஆகியோருடன் வசித்து வந்தார்.
மனோன்மணியின் முதல் கணவர் ரங்கசாமி, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து சென்றுவிட்டார்.இயைடுத்து, மனோன்மணிக்கும் சுப்பையா என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. சுப்பையா தற்போதுமலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்.
கண்ணன் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் இருந்து வந்தார். இதில் பல பேரிடம் பணம்வாங்கிவிட்டு, அவர்களை வேலைக்கும் அனுப்பவும் முடியாமல், பணத்தைத் திரும்பத் தரவும் முடியாமல் திண்டாடிஇருக்கிறார்.
ஒரு கட்டத்தில் கடன் தொல்லை தாங்காமல் கண்ணன் வீட்டை விட்டு வெளியேறி, சென்னைக்கு சென்று விட்டார்.
பல மாதங்களாகியும் கண்ணனிடம் இருந்து, தகவல் ஏதும் வரவில்லை. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள்மனோன்மணியிடம் நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் மனமுடைந்த மனோன்மணி குடும்பத்தினர்தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தனர்.
கடந்த புதன்கிழமை இரவு, மனோன்மணி, அவரது தாய் இந்திரா, மகள் கலா ஆகிய 3 பெண்களும் தங்களதுவீட்டிற்குள் வரிசையாக தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துத் தகவல் அறிந்ததும், டி.எஸ்.பி.விஜயகுமாரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications